ஏங்க...ஒரு வாரத்துக்குத் தேவையான தக்காளிக் தொக்கும், புளியோதரைத் தொக்கும் பண்ணி வச்சிருக்கேன்.. சாதம் மட்டும் சூடா குக்கர்ல வச்சுக்கோங்க.... தொட்டுக்க கத்திரிக்காய் புளித்தொக்கு இருக்கு.. வேணும்னா பக்கோடா வாங்கிக்கோங்க...
மாவு பிரிட்ஜில இருக்கு... நாலு இட்லியை ஊத்தித் தக்காளித்தொக்கு வச்சு சாப்பிடுங்க... என்றாள் மகேசு.
சரிம்மா.... அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..
ட்ரெயின் கிளம்பப்போகுது... பிள்ளைகளைப் பத்திரமா பார்த்து கூட்டிக்கிட்டுப் போ...
இறங்கி உன் தம்பியைப் பார்த்ததும் ஃபோன் பண்ணு... நான் கல்யாணத்துக்கு முதல் நாள் வந்திடுவேன் என்றான் செந்தில்...
பசங்களா பார்த்துப் போயிட்டு வாங்க ப்பை... என்றான்.
பை டாடி.., என்று கையாசைத்தனர் சுவாணியும், கவினும்...
ஷிப்பர் கோச் என்பதால் குறும்பத்தனம் கொஞ்சம் குறைவாக இருந்தது. சீக்கிரம் படுத்துத் தூங்கிவிட்டனர் குழந்தைகள்...
விடியற்காலை ஐந்துரை மணிக்கெல்லாம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது எக்ஸ்பிரஸ்....
இவர்கள் இறங்கும் முன்பே சபீர் தீதும்பா பென்சில் தீதும்பா பென்சில் சட்டவிளக்கு ஜூலை - 2026 32 அங்கு வந்திருந்தான். ஐ மாமா மாமா என்று குழந்தைகள் கூச்சலிட்டுக்கொண்டே சபிரிடம் ஓடினர்... சபீர் தன் மருமகப் பிள்ளைகளை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தான்...
அக்காவிடம் நலம் விசாரித்தான்.
சுவாணி இப்போ எந்த கிளாஸ் படிக்கிறீங்க.. என்ற சபீரிடம், ஃபிஃப்த் ஸ்டாண்டர்ட் (ஐந்தாம் வகுப்பு) மாமா என்றாள்... கவின் மாமா நான் தேர்ட் ஸ்டாண்டர்ட் என்றான்.
பின்னர் லோக்கல் எலெக்ட்ரிக் ட்ரெய்னில் ஏறி அமர்ந்தனர்..
சுவாணி தன் மாமாவுக்கு எதிரே அமர்ந்து கொண்டாள்...
மாமாவிடம், அத்தை பேரு ஸ்ரீயாவா மாமா சூப்பரா இருக்கு... அத்தை அழகா இருப்பாங்களா என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள்.
சபீரும் சலிக்காமல் பதில் கூறிக்கொண்டே வந்தான்.
சுவாணி வகுப்பில் படித்துவிட்டு.. எல்லாரிடமும் இனிமையாகப் பழகுவாள்.
யார் என்ன கேட்டாலும் கொடுப்பாள்.
தன்னிடம் உள்ள கியூம்பா பென்சிலைத் தவிர...
அவள் பிறந்தநாளுக்கு அவள் அத்தை வாங்கிக் கொடுத்த பரிசு. அவளுக்கு மிகவும் பிடித்த பரிசு கியூம்பா பென்சில்..
சுவாணிக்கு சென்னையில் இருக்கும் அவள் அமாச்சியின் மீதும் அளவற்ற பிரியம் என்பதால் தன் மாமாவின் திருமணத்திற்காகச் சென்னை செல்கிறோம் என்று அவள் சொல்லாத ஆளே கிடையாது அவள் வகுப்பில்...
சுவாணியும் சபீரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே சமோசா சமோசா என்ற சத்தம் கேட்க மாமா எனக்கு சமோசா என்றான் கவின்... ம...சு மிரட்ட சபீர் சமாதானம் செய்து வாங்கிக் கொடுத்தான்....
ஜாலியாகப் பேசிக் கொண்டே வந்த சுவாணி திடீரென்று அமைதியானாள்..
சபீர் சுவாணி சுவாணி என்று கூப்பிட்டும் அவள் திரும்பாததால் அவள் என்ன பார்க்கிறாள் என்று திரும்பிப் பார்த்தான் சபீர்.
சாட்டையால் ஒரு குழந்தை தன்னை அடித்துக் கொள்ள, மற்றொறு சிறுமி ஒரு வளைளையத்தை வைத்துக்கொண்டு வித்தை காட்டினாள். அவர்கள் அம்மா இடுப்பில் கைக்குழந்தையுடன் ஒரு தட்டை அனைவரிடமும் நீட்டினாள்.. சிலர் சில்லறைகளை தட்டில் போட்டனர்.
சுவாணி மாமா... நானும் கவினும் ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கோம்...
இவங்க ரெண்டு பேரும் ஏன் ஸ்கூலுக்குப் போகலை... என்று கேட்டாள்..
அவங்க அம்மா ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாங்க என்றான் சபீர்...
அந்தப் பெண் தட்டை சபிரிடம் நீட்டினாள்... சுவாணி அந்தக் குழந்தைகளிடம் நீங்க ஏன் ஸ்கூலுக்குப் போகலை என்றதும்...
அவள் அம்மா இரண்டு குழந்தைகளையும் ஜூலை - 2026 சட்டவிளக்கு 33 இழுத்துக்கொண்டு அடுத்த கம்பார்ட்மென்ட்க்கு ஓடிவிட்டாள்...
பாட்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளினார்கள்...
செய்து வைத்த பலகாரத்தை சுவாணிக்கு ஊட்டினாள் பாட்டி...
குழந்தைகளின் கோலாகலத்துடன் கல்யாண வீடு களை கட்டியது...
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றான் சபீர்..
அனைத்துக் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் சுவாணி மட்டும் ஏதோ யோசனையில் மூழ்கிக் கிடந்தாள்...
சபீர் சுவாணியிடம் சுவாணி குட்டிக்கு என்ன யோசனை என்று கேட்டான்.
அதற்கு சுவாணி, மாமா எங்க இஃப் சோசியல்ல ஒரு லெசன் நடத்தினாங்க..
குழந்தைகள் ரைட்ஸ் (உரிமைகள்) பத்தி அதுல வந்தது மாமா என்றாள்...
அப்படியா... என்ன ரைட்ஸ் சுவாணி...
ஆறு முதல் பதினான்கு வயது வரை அனைத்துக் குழந்தைகளும் இலவசமாகப் படிக்கிறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்காம் மாமா...
அதுக்கு சட்டமே இருக்காம் மாமா...
அப்புறம் ஏன் மாமா ட்ரெயின்ல பார்த்தோமே அவங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்குப் போகலை... இப்படி படிக்கிற வயசுல வேலை செய்யக்கூடாது மாமா...
உங்க ஃபோனுக்குக் குடுங்க மாமா... ஸ்கூல் போகாத குழந்தைகளை எங்கேயாவது பார்த்தா 1098 -க்கு கால் பண்ணி சொல்லலாம்னு இஃப் சொன்னாங்க மாமா என்றாள் சுவாணி...
சபீர் சுவாணியிடம் டெய்லி மாமா அந்த ட்ரெயின்ல தான் வேலைக்கு போவேன்... நாளைக்கு அவங்க அம்மாவ பார்த்து அவங்க ரெண்டு பேரையும் ஸ்கூல்ல சேர்க்க சொல்லுரேன்.. நீ ஒன்றும் கவலைப்படாதடா என்று சமாதானப்படுத்தினான்..
இரவு படுக்கும் போது அம்மா கவின் பாருமா.. எப்பப் பார்த்தாலும் என் கியூம்பா பென்சில எனக்கு கேட்காமலே எடுக்குறான் என்றாள் சுவாணி... அம்மா அதட்ட ஒரு வழியாக அடுக்காக முடிந்து தூங்கிப் போனார்கள்...
மறுநாள் காலை சபீர் கவின், சுவாணி டாட்டா... மாமா ஆஃபீஸ் முடிந்து வரும் போது உங்களுக்கு பீட்சா வாங்கிக்கிட்டு வரேன் என்று கூறிக்கொண்டே பைக்கைத் உதைத்தான்
சுவாணி, மாமா மாமா என்று கூப்பிட்டுக்கொண்டே சபீரை நோக்கி ஓடினாள்...
மாமா அந்தக் குட்டிப்பையன் நாளைக்கு ஸ்கூலுக்கு போவான்ல... அவனுக்கு இந்த கியூம்பா பென்சில, என்னோட கிஃப்ட்னு சொல்லிக் கொடுத்துடுங்க மாமா என்று சபின் கையில் கொடுத்து மகிழ்ச்சியுடன் பாட்டியிடம் ஓடினாள்.
சட்டவிளக்கு ஜூலை - 2026 34 ஜூலை - 2026 சட்டவிளக்கு 35